எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம்...
இதற்காக நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்; அதைச் சமூகப் பணி என்று முத்திரையுமிடுகின்றோம்...
ஆனால் உலகம் வழக்கம் போல் அதன் இயல்பிலே, போக்கிலேதான் போய்க்கொண்டிருக்கிறது...
பல அருளாளர்கள். அறிஞர்கள், ஞானியர்கள் தோன்றியும் இச்சிக்கல்கள் இன்னும் தீரவில்லை என்பதே உண்மை...
இச்சிக்கலுக்குத் தீர்வு காண முடியுமா என்பதும் தெரியவில்லை...
இருப்பினும் நாம் ஒரு தேடலை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும்...
இதற்கு நாம் என்ன செய்யலாம்?
முதலில் நாம் நல்லவர்களாக இருக்க முயல வேண்டும்...
இதுவே இதற்கு நல்லதொரு தீர்வாக அமையுமென்று கருதுகின்றேன்...
”நான் நல்லவன்” என்ற நம்பிக்கை நமக்கு எற்படுமாயின் அஃது ஆணவத்தை ஏற்படுத்திவிடும் என்பதும் நாம் அறிந்ததே!
நம்பிக்கை என்பதும் நமது அறியாமையே!
அது நமக்கு உண்மையான தெளிவினைத் தராது...
எனவே,
நமக்குள்ளே ஒரு தேடல் இருக்குமாயின் நாம் திண்ணமாக ஒரு நாளில் தெளிவினைப் பெறுவோம்...
அப்படியாயின் மற்றவர்களின் கதி என்ன என்ற வினா எழலாம்...
அனைவருக்கும் வாழ்வில் என்றாவது ஒரு நாளில் தேடல் தொடங்கும்...
அதுவரை நாம் நமக்குள்ளே உண்மையைத் தேடுவோம்..