மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்க்கும் போது ஒரு வித நிறைவு ஏற்படுகிறது; மன அமைதியும் ஏற்படுகிறது...
துன்பங்களைக் காணும் போது மனம் கவலையுறுகிறது...
நான் இன்று வாழும் வாழ்க்கை திண்ணமாக எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை...
ஆயினும் மற்றவர்களின் மகிழ்ச்சியில் ஒரு மன நிறைவு கொள்ள முடிகிறது...
அதுதான் என்னுடைய மகிழ்ச்சியாகவும் இருக்கிறது...
இருப்பினும் இதுவும் தொடர வாய்ப்பில்லாமல் போகும் போதுதான் மிகவும் வேதனையாக இருக்கிறது...என்னாலும் பொஇயாகப் பழக முடியவில்லை...
அவர்களாலும் பொய்யாகப் பழக முடியவில்லை...
இங்குதாம் வேற்றுமைகள் தொடங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது...
எஃது எப்படி இருப்பினும் ஒன்றை மட்டும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்...
எதற்கு அதிக ஆற்றல் இருக்கிறதோ அதுவே வெல்லும்...
அதுவே நாம் தேடும் உண்மையாகவும் இருக்கும்...
தீயில் ஒரு பொருளைப் போட்டால் அப்பொருளும் தீயின் தன்மையைப் பெறுமேயன்றி தீ அப்பொருளாக மாறாது...
இதுவே இயற்கையின் நியதி...
இறைமையின் ஆட்சி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.