எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
செவ்வாய், 29 டிசம்பர், 2020
பூமியின் ஒவ்வொரு குழந்தையுமே அவர்களுக்கே உரியதான உள்ளுணர்வுகளுடன் பிறப்பவர்கள்...
"பூமியின் ஒவ்வொரு குழந்தையுமே அவர்களுக்கே உரியதான உள்ளுணர்வுகளுடன் பிறப்பவர்கள். காரண அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு அறிதல், அவர்களை ஆழ்ந்த ஞானத்தில் நேரடியாக வேர்கொள்ள வைத்து, 'உண்மையில் நான் யார்?' என்ற பேருண்மையோடு இணைக்கிறது. உண்மையை அறிந்தே உலகில் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிறது. குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கவனிப்பாளர்கள் என்ற வகையில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், குழந்தைமனதுக்குள் உள்ளுணர்வு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதோடு, நம் குழந்தைகளின் உள்ளார்ந்த அன்புறவை வளர்ப்பதும் ஆகும். மேலோட்டமாகப் பார்த்தால் எளிதாகத் தோன்றும் இது, உண்மையில் நிறைய வாழ்வனுபவங்களுக்குப் பிறகே நமக்குக் கிடைக்கிறது.உள்ளுணர்வை நிராகரித்த உலகறிவு என்பது ஒரு குழந்தையை ஊனப்படுத்துவதற்குச் சமம்”
- ஜூலி ஹாமில்டன் (Generation Intuitive புத்தகத்தின் ஆசிரியர்)
குழந்தைகளுலகம் என்பது அவர்களுக்கு உரியதான சிறுசிறு கனவுகளும் நம்பிக்கைகளும் நிறைந்த பேருலகு. மொழிகளைத் தாண்டிய அறிதலுணர்வை பெரியவர்களாகிய நாம் அடைந்திடத்தான், உண்மையில் ஒவ்வொரு குழந்தையும் பாடாய்ப்படுகிறது.
எப்படியாவது தங்களுலகத்தின் தாழற்ற கதவுகளைத் திறந்துகாட்டி, பெரியவர்களை மீண்டும் குழந்தைகளாக்கிவிட முடியாதா என ஏங்கித்தவித்து மெனக்கெடுகிறார்கள். நமக்குள் இருக்கும் ரகசியக்குழந்தையை குழந்தைகள் வெகுசீக்கிரமாகவே கண்டுபிடித்துவிடுகிறார்கள். மகிழ்வாக இருப்பதற்குத் தடையான அனைத்திலிருந்தும் மனதை விலக்கிக்கொள்வது சிறாரியல்பு.
குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் படைக்கிற அத்தனைக் படைப்புகளுமே "நாங்கள் எங்களுள் வாழும் குழந்தையை இன்னும் இழந்துவிடவில்லை" என்பதைச் சொல்கிற மனமுதிர்வுதான். கதை, ஓவியம், இசை, சிற்பம் என ஒவ்வொரு கலையிலும் அந்த உண்மையைத்தான் நாம் கதறியழுதோ அல்லது சிரித்துமகிழ்ந்தோ உரக்கச் சொல்கிறோம்.
குழந்தமையின் நுனியைத் தீண்டிவிட்ட ஒரு படைப்பு காலத்தால் உச்சம் கொள்வதற்கான அகக்காரணம் அதுதான். "பிங்க் கலரு பிங்க்காவே இருந்தா அதுக்கு போரடிக்காதா?" எனக் கேட்கிற ஒரு குழந்தையின் உள்ளுணர்வு திறக்கிற ஜீவவெளி என்பது, நிறங்களுக்குள் வாழ்கிற அழியாதப் பேரிறைக்கு அக்குழந்தை தருகிற அனிச்சை முத்தம்.
அத்தகையதொரு அனிச்சை முத்தத்தை குழந்தைகளிடமிருந்து பெரியவர்களுக்குப் பெற்றுத்தந்துவிடும் தணியாக்கனவோடு தும்பி இதழின் ஒவ்வொரு காகிதப்பக்கமும் வடிவேற்கிறது.
கதை என்பது ஒரு திறவி. யதார்த்தத்திற்கும் கனவுக்கும் இடைப்பட்ட தடைக்கதவைத் திறப்பதோடு அத்திறவி தன்னை நிறுத்திக்கொள்கிறது. அதன்பின் நிகழ்வதெல்லாம் உள்ளுணர்வின் பாய்ச்சல். உண்மையில் ஒரு கதை துவங்குவது குழந்தையின் உள்ளுணர்வில்தான்! சில செயல்களின் இலக்குகள் தோற்றால்கூட நமக்கு நம்பிக்கை தருபவை. குழந்தையின் உள்ளுணர்வையும் கற்பனையையும் அறிய முயன்று தோற்பதிலும்கூட தும்பி தன் அகநிறைவை அடைகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.