ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

இயற்கையின் சீற்றம்

இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ள யாராலும் முடியாது என்பதைத்தான் இறைவன் ஜப்பான் பேரிடர் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறான்...
அறிவியல் மனிதனின் நாகரிக மேம்பாட்டுக்கு உதவி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்தாக மட்டுமே முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
வசதிகளைப் பெருக்கி வாழ்க்கையை வளமாக்குவது மனித இயல்பு எனினும் அதை எப்படி, எந்த அளவுக்கு செய்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்,
அதற்கு நாம் என்ன விலை கொடுக்க நேரும் என்பதை இதன் வழி,
இயற்கை சீற்றம் மனித குலத்திற்கு உணர்த்தியிருக்கிறது...
எந்த நாட்டில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே நிவாரண உதவிகளை அனுப்பும் ஜப்பான் நாட்டின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
தனக்கென, தன் நாட்டு மக்களுக்கென எந்த நாடும் உதவ முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளது...
அங்கு ஏற்பட்டுள்ள அணுக்கசிவு அந்நாட்டிற்கு யாரையும் செல்ல விடாமல் தடுக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது...
இது கொடுமையிலும் கொடுமையல்லவா?

ஜப்பான் நாட்டு மக்கள் இத்துன்பத்திலிருந்து மீள,
உலக மக்கள் அனைவரும் ஒரு மனத்துடன் இறைவனை வேண்ட, ”இறைவா அருள் பாலிப்பாயாக...”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...