செவ்வாய், 26 ஏப்ரல், 2011

நட்பு என்பது.....???

நட்பு என்பது நடிப்பல்ல அது நாடி துடிப்பு

கண்ணில் பதிந்த உறவுகள் மறையலாம். ஆனால் நெஞ்சில் பதிந்த உறவுகள் என்றும் மறைவதில்லை உன் நட்பை போல (என் கற்பனை நட்பு)

நீ நேசிக்கும் போது மட்டும் நேசிப்பவன் நண்பன் அல்ல, நீ வெறுக்கும் போதும் மட்டும் நேசிப்பவன் தான் உண்மையான நண்பன்.

நூறு முறை பிறந்தாலும் ஒரு முறை இறந்தாலும், மறுமுறை பிறக்கும் போது உன் நட்பு வேண்டும் என்று இறைவனிடம் கேட்பேன்..

மனசுக்கு பிடிச்சவங்க கூட மனம் விட்டு பேசும் போதுதான் மரண வலி கூட மறந்து போகும். So share ur feelings

காதலிப்பது குற்றம் என்றால் காதலிக்க வேண்டும் என்று உணர்வை கொடுத்த "கடவளும்" குற்றவாளி தான்

கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்து. உன்னால் சாதிக்க முடியும்.

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை. உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்….

உரிமை கொண்டாட ஆயிரம் உறவுகள் இருந்தாலும், உள்ளத்தை புரிந்துகொள்ள ஒரே ஒரு நட்பு போதும்.

நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்.

செடிக்கும் பூவுக்கும் உள்ள சொந்தம் ஒரு நாள் தான். ஆனால் செடிக்கும் வேருக்கும் உள்ள சொந்தம் உயிர் உள்ள வரை தொடரும். நம் நட்பை போல…

வெற்றியின் போது கை தட்டும் அந்த பத்து விரல்களை விட, தோல்வியின் போது துடைக்கும் ஒரு விரலுக்கே மதிப்பு அதிகம்..

உறவு என்று சொல்லிக்க யாரும் இல்லாவிட்டாலும் "உயிர்" என்று சொல்லிக்க ஒருவர் இருந்தால் போதும். நம் நட்பை போல...

மண்ணில் விழுந்த மழை துளியை பார்த்து பூமி கேட்டது எத்தனை முறை விழுவாய் என்று. மழை துளி சொன்னது என்னை தாங்கி கொள்ள நீ இருக்கும் வரை என்று..

வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்…

நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே பெரியது.. So don’t worry about anything..

வெளிச்சத்தை தேடினேன் நிலவை கண்டுபிடித்தேன். கனவை தேடினேன் தூக்கத்தை கண்டுபிடித்தேன். நட்பை தேடினேன் உன்னை கண்டுபிடித்தேன் (ஆனால் உண்மையில் இன்னும் கண்டுபிடிக்கவில்லை) .......

(நட்பு எப்படி இருக்க வேண்டும் என்ற எனது எண்ணமே, எழுது வடிவானது.........
http://www.raaga.com/player4/?id=6981&mode=100&rand=0.33952525003347855

1 கருத்து:

  1. "கண்ணில் ஒரு மின்னல்"
    "முகத்தில் ஒரு சிரிப்பு"
    "சிரிப்பில் ஒரு பாசம்"
    "பாசத்தில் ஒரு நேசம்"
    "நேசத்தில் ஒரு இதயம்"
    அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...