ஞாயிறு, 6 மார்ச், 2011

உளறல் - 17

என்னைச் சுற்றியிருப்பவர்கள் உண்மையானவர்களாகவே இருக்க வேண்டும் என்ற என் வேண்டுதல் என்னைத் தனிமை படுத்திவிடும் என்றே கருதுகின்றேன்...
மற்றவர்களின் உரிமையில் தலையிடக்கூடாது என்று எண்ணினாலும் சில
வேளைகளில் அன்பின் அடிப்படையில் தலையிட நேரிடுகிறது...
இது சரியா தவறா என்றும் தெரியவில்லை...
நான் எங்குச் சென்று கொண்டிருக்கிறேன் என்று எனக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை...
ஆனால்,
யாரும் இல்லாத ஏதோ ஓரிடத்திற்குச் செல்ல முனைகிறேன் என்பதை மட்டும் உணர முடிகிறது...
இப்பொழுது ஏற்பட்டிருக்கிற உளப்போராட்டத்தில் விரைவில் தெளிவு ஏற்பட்டு ஒரு விடிவும் ஏற்படும் என்று நினைக்கின்றேன்!
ஒன்று மட்டும் உண்மை...
நான் மற்றவர்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இறைவன் வழிகாட்டிக்கொண்டே இருக்கிறான் என்பதை உணர முடிகிறது...
உள்ளத்தின் வலியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...