என்னைச் சுற்றியிருப்பவர்கள் உண்மையானவர்களாகவே இருக்க வேண்டும் என்ற என் வேண்டுதல் என்னைத் தனிமை படுத்திவிடும் என்றே கருதுகின்றேன்...
மற்றவர்களின் உரிமையில் தலையிடக்கூடாது என்று எண்ணினாலும் சில
வேளைகளில் அன்பின் அடிப்படையில் தலையிட நேரிடுகிறது...
இது சரியா தவறா என்றும் தெரியவில்லை...
நான் எங்குச் சென்று கொண்டிருக்கிறேன் என்று எனக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை...
ஆனால்,
யாரும் இல்லாத ஏதோ ஓரிடத்திற்குச் செல்ல முனைகிறேன் என்பதை மட்டும் உணர முடிகிறது...
இப்பொழுது ஏற்பட்டிருக்கிற உளப்போராட்டத்தில் விரைவில் தெளிவு ஏற்பட்டு ஒரு விடிவும் ஏற்படும் என்று நினைக்கின்றேன்!
ஒன்று மட்டும் உண்மை...
நான் மற்றவர்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இறைவன் வழிகாட்டிக்கொண்டே இருக்கிறான் என்பதை உணர முடிகிறது...
உள்ளத்தின் வலியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
ஞாயிறு, 6 மார்ச், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.