இன்றைய நிலையில் உள நிலையில் தெளிவில்லை...
என்னுடன் அன்புடன் பழகுகின்றவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை நினைத்து எதுவுமே செய்ய இயலாத நிலையில் இருப்பதை நினைக்கும் போது வருத்தமே மேலிடுகிறது...
என்னால்தான் இத்துன்பமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெளிந்த உண்மையாக இருந்தாலும் அவர்கள் இதில் காட்டும் உறுதி என்னை வியக்க வைக்கிறது...
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று கூறும் அளவிற்கு என் பக்குவம் உயர்ந்திருக்கவில்லை...
என்னால் அவர்களை விட்டு விலகி இருக்கவும் முடியவில்லை...
அவர்களுக்காக...
அவர்களின் உண்மை அன்பிற்காக...
அவர்களின் மன உறுதிக்காக...
எது நடந்தாலும் இந்த உறவில் உண்மை இருக்கிறது என்ற தெளிவான நிலைப்பாடும்...
எதையும் இழக்கத் தயாராக இருக்கும் மன உறுதியும்...
என்னை வியப்பில் ஆழ்த்துகிறது...
இதுவே வாழ்வின் இறுதிக் கட்டமோ என்று நினைக்கத் தோன்றுகிறது...
எதற்காகவோ எல்லாவற்றையும் இழக்கும் துணிவு (துறவு ) என்பது வாழ்வின் இறுதி நிலை என்பதுதானே உண்மை?
எனது வேண்டுதல் இதுவே...
”என் மீது அன்பு செலுத்தியவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை என்றாலும் அமைதியாக வாழவாவது அருள் புரி”
எனது தேடல் தொடரும்...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
புதன், 16 மார்ச், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.