புதன், 16 மார்ச், 2011

உளறல் - 19

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் உண்மையாகவே என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்துவிட்டது...
அவர்கள் ஆறுதல் பெற இறைவனை வேண்டுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை...
உலகம் எவ்வளவுதான் தொழில் நுட்பத்தில் வளர்ந்திருந்தாலும் இயற்கை மனிதனை வென்று விடுகிறது என்பதுதான் உண்மை என்பதைத் தெளிவாக உணர முடிகிறது...
ஒரு சராசரி மனிதனாக அவர்களுக்காக வருத்தப்பட முடிகிறதே தவிர நம்மால் வேறு என்ன செய்ய இயலும்?
நம்மை மீறிய ஆற்றல் ஒன்று இருக்கிறது என்பதையே இஃது உணர்த்துகிறது...
நாம் மற்றவர்களுக்காக வாழ்ந்தாலும் இது போன்ற சமயங்களில் நம்மால் எதுவுமே செய்ய முடியாத நிலைதான் ஏற்படுகிறது...
அவர்களுக்காக இறைவனை வேண்டுவதைத் தவிர...
எனவே,
மனிதர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன வழி என்பதை தனி மனிதனே சிந்திக்க வேண்டும் எனக் கருதுகின்றேன்.
மற்றவர்களுக்குத் துன்பம் தராமல் நம்மால் வாழ இயலுமா என்பதும் தெரியவில்லை...
உலகத்துடன் இணைந்து வாழும் போது இவ்வாறு நிகழ்வது இயல்பான ஒன்றுதான் என்பதை உணர்ந்தாலும் நம் மனம் ஏன் அவர்களுக்காகக் கவலை கொள்கிறது என்பதும் புரியவில்லை...
அன்பு கொள்வதால் இது நிகழ்கிறது என்று கொண்டாலும் அன்பு கொள்வதே தவறு என்று அல்லவா பொருள்படுகிறது?

ஒன்றுமே புரியாமல் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது மட்டுமே இப்பொழுது புரிந்த ஒன்றாக இருக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...