திங்கள், 7 மார்ச், 2011

உளறல் - 18

உண்மை அன்பு இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை..
மற்றவர்களைப் பார்த்து இந்த உலகைப் புரிந்து கொண்டேன்!
ஒரு சிலரைப் பார்த்து என்னையே புரிந்து கொண்டேன்...
உலக இலக்கியங்களில் படித்த உயர்ந்த கருத்துகளையெல்லாம்
அன்பான உள்ளங்களுடன் பழகிய ஒவ்வொரு கணமும்
உணர்ந்து கொண்டுதான் இருக்கின்றேன்...
அனைவருடனும் நெருங்கிப் பழக இயலவில்லை...
எனவே யாரையும் எளிதில் நம்பவும் மனம் மறுக்கிறது...

உண்மை தேடல் தொடர்கிறது...
நம்மைப் பாராட்டும் நண்பைர்களை விட
நம்மைத் தூற்றும் விரோதிகளைத்தாம் நாம் அதிகம் நேசிக்க வேண்டும்...
அவர்கள்தாம் நம் வலிமையை உண்மையாக உணர்ந்தவர்கள்...
ஒன்றுமே இல்லாதவனிடமா நம்மால் அழுக்காறு கொள்ள முடியும்?
நம்மை விட அதிகம் உள்ளவனிடம்தான் அழுக்காறு ஏற்படும்...
எனவே உண்மையை உணர்ந்து
இந்த உலகைப் பற்றிய உண்மைகளை அறிவோம்...
உலகைப் புரிந்து கொள்ள எனது தேடல் தொடரும்...
நமக்கு
வாக்கில் உண்மையும்
சிந்தனையில் உயர்வும் தெளிவும்
செயலில் பணிவும்
தோற்றத்தில் எளிமையும் இருக்க வேண்டும்...
இதுவே தற்சமயம் எனது வேண்டுதலாகும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...