உண்மை அன்பு இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை..
மற்றவர்களைப் பார்த்து இந்த உலகைப் புரிந்து கொண்டேன்!
ஒரு சிலரைப் பார்த்து என்னையே புரிந்து கொண்டேன்...
உலக இலக்கியங்களில் படித்த உயர்ந்த கருத்துகளையெல்லாம்
அன்பான உள்ளங்களுடன் பழகிய ஒவ்வொரு கணமும்
உணர்ந்து கொண்டுதான் இருக்கின்றேன்...
அனைவருடனும் நெருங்கிப் பழக இயலவில்லை...
எனவே யாரையும் எளிதில் நம்பவும் மனம் மறுக்கிறது...
உண்மை தேடல் தொடர்கிறது...
நம்மைப் பாராட்டும் நண்பைர்களை விட
நம்மைத் தூற்றும் விரோதிகளைத்தாம் நாம் அதிகம் நேசிக்க வேண்டும்...
அவர்கள்தாம் நம் வலிமையை உண்மையாக உணர்ந்தவர்கள்...
ஒன்றுமே இல்லாதவனிடமா நம்மால் அழுக்காறு கொள்ள முடியும்?
நம்மை விட அதிகம் உள்ளவனிடம்தான் அழுக்காறு ஏற்படும்...
எனவே உண்மையை உணர்ந்து
இந்த உலகைப் பற்றிய உண்மைகளை அறிவோம்...
உலகைப் புரிந்து கொள்ள எனது தேடல் தொடரும்...
நமக்கு
வாக்கில் உண்மையும்
சிந்தனையில் உயர்வும் தெளிவும்
செயலில் பணிவும்
தோற்றத்தில் எளிமையும் இருக்க வேண்டும்...
இதுவே தற்சமயம் எனது வேண்டுதலாகும்...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
திங்கள், 7 மார்ச், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.