புறவாழ்க்கை தொடர்பான எண்ணங்கள் இறையருளால் ஈடேறி வருவதைக் காணும்போது வியப்பாக உள்ளது...
ஆனால் இப்பொழுது அவை மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதையும் உணர முடிகிறது...
நமது எண்ணங்களே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பது உண்மையா?
அகவாழ்க்கையில் இஃது ஏன் நடைபெறுவதில்லை என்பது புரியாத புதிராக உள்ளது...
ஒரு வேளை தாமதித்து நடைபெறலாம் !
திண்ணமாக ஈடேறும் என்பதே இயற்கையின் நியதி என்பதால் பொறுமையுடன் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்...
இறையருளால் எண்ணத்தின் வலிமை கூட வேண்டும்; உண்மையினை உணர வேண்டும்; அதுவே வாழ்க்கையாக வேண்டும்...
நமக்குத் தெரிந்த அளவிலும் முடிந்த அளவிலும்தான் நம்மால் சிந்திக்க முடிகிறது; முடிவெடுக்க முடிகிறது; அதுவரை அவையே நமக்கு உண்மைகளாகத் தெரிகிறது...
ஆனால் மேலான உண்மைகள் உடனடியாக உணரப்படுவதில்லை.
மேலான உண்மைகளை உணர வாழ்க்கையின் போராட்டங்களே நமக்கு உதவுகின்றன; வழிகாட்டுகின்றன.
உண்மைகள் நம்மை வெறுமையை நோக்கி நகர்த்துகின்றன என்றாலும் அவை நம்மை மேலும் மேலும் பக்குவப்படுத்துகின்றன என்பதே உண்மை...
நாம் ஒரு நிலையை அடையும் வரை தற்போதைய நிலையையே உண்மையென்று நம்புகின்றோம்; அதையே மற்றவர் மீதும் திணிக்கின்றோம்...
நமக்கு உண்மையாகப் படும் ஒன்று மற்றவர்களுக்கும் உண்மையாகத் தெரியுமா? பார்வைகள் வேறுபடும்போது பார்க்கப்படும் பொருள்களின் தன்மைகளும் வேறுபடுகின்றன; நமது பண்புகளும் வேறுபடுகின்றன.
இங்கு ஏற்படும் போராட்டங்களிலே மனிதன் மேலான உண்மைகளையும் தனது இயல்பிற்கேற்ப கீழ் நிலைக்குக் கொண்டு வந்து விடுகின்றான்; அதையே உண்மையெனவும் வாதிடுகின்றான்; வலியுறுத்துகின்றான்.
எனவே,
எது உண்மை என்று தெரிந்து கொள்ளும் வரை மேலான உண்மைகள் மேலான உண்மைகளாகவே இருக்கட்டும்...
நமது தேடல்கள் நின்ற போதிலும்
நமது ஊக்கம் குறைந்த போதிலும்
நமது முயற்சிகள் முடிவுற்ற போதிலும்
நமது ஆழமான பார்வையினால்... சிந்தனையினால்...
உண்மைகள் தாமாகவே நம்மை நாடி வரும்...
அதுவரை வாழ்க்கையுடன் போராடும் ஆற்றலை இறைவன் எனக்கு அருள வேண்டும்...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
Youtube-இல் தங்களது இணையதள முகவரியை கண்டேன். உங்களது கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை. என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. தங்களை என் தோழியாக நான் ஏற்றுகொள்ள உங்கள் அனுமதி வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஅன்புடன்,
சா.வே. இளமாறன்