திங்கள், 3 அக்டோபர், 2011

உறவாட வேண்டும்...

உள்ளான உணர்வினிலே உன்னோடு உறவாடி
ஒவ்வொருநாளும் நான் வாழ வேண்டும்
உறவாட என்னிடம் நீ வரும்போது நான்
தடை ஒன்றும் போடாமல் காக்க வேண்டும்
அன்னையாய் என்னை நீத் தழுவிடும்போது
அழுகின்ற குழவியாய் நான் மாற வேண்டும்
தந்தையாய் என்னை நீ தட்டிக் கொடுத்திட
தாள் சேர்ந்து பணிவாக கற்க வேண்டும்
தனயனாய் எனக்கு நீ வழிகாட்டும் போது
தயங்காமல் உன் பின் செல்ல வேண்டும்
தோழனாய் என்னை நீ தோள்சேர்க்கும் போதிலே
தோள்மீது தலைசாய்ந்து கண்மூட வேண்டும்
காதலாய் என்னிடம் கனிவுடன் வரும்போது
கசிந்துருகி உன்மார்பில் தவழவேண்டும்
எத்தகைய உறவாக என்னிடம் வந்தாலும்
உள்ளான உணர்வோடு நாம் வாழ வேண்டும்!


எழுதியவர்....
'யாரோ'

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...