உள்ளான உணர்வினிலே உன்னோடு உறவாடி
ஒவ்வொருநாளும் நான் வாழ வேண்டும்
உறவாட என்னிடம் நீ வரும்போது நான்
தடை ஒன்றும் போடாமல் காக்க வேண்டும்
அன்னையாய் என்னை நீத் தழுவிடும்போது
அழுகின்ற குழவியாய் நான் மாற வேண்டும்
தந்தையாய் என்னை நீ தட்டிக் கொடுத்திட
தாள் சேர்ந்து பணிவாக கற்க வேண்டும்
தனயனாய் எனக்கு நீ வழிகாட்டும் போது
தயங்காமல் உன் பின் செல்ல வேண்டும்
தோழனாய் என்னை நீ தோள்சேர்க்கும் போதிலே
தோள்மீது தலைசாய்ந்து கண்மூட வேண்டும்
காதலாய் என்னிடம் கனிவுடன் வரும்போது
கசிந்துருகி உன்மார்பில் தவழவேண்டும்
எத்தகைய உறவாக என்னிடம் வந்தாலும்
உள்ளான உணர்வோடு நாம் வாழ வேண்டும்!
எழுதியவர்....
'யாரோ'
ஒவ்வொருநாளும் நான் வாழ வேண்டும்
உறவாட என்னிடம் நீ வரும்போது நான்
தடை ஒன்றும் போடாமல் காக்க வேண்டும்
அன்னையாய் என்னை நீத் தழுவிடும்போது
அழுகின்ற குழவியாய் நான் மாற வேண்டும்
தந்தையாய் என்னை நீ தட்டிக் கொடுத்திட
தாள் சேர்ந்து பணிவாக கற்க வேண்டும்
தனயனாய் எனக்கு நீ வழிகாட்டும் போது
தயங்காமல் உன் பின் செல்ல வேண்டும்
தோழனாய் என்னை நீ தோள்சேர்க்கும் போதிலே
தோள்மீது தலைசாய்ந்து கண்மூட வேண்டும்
காதலாய் என்னிடம் கனிவுடன் வரும்போது
கசிந்துருகி உன்மார்பில் தவழவேண்டும்
எத்தகைய உறவாக என்னிடம் வந்தாலும்
உள்ளான உணர்வோடு நாம் வாழ வேண்டும்!
எழுதியவர்....
'யாரோ'

தங்களது படைப்புகள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குஅன்புடன்,
சா.வே. இளமாறன்