வியாழன், 10 நவம்பர், 2011

உளறல் 40

அனைவரையும் அனைத்து நிலையிலும் நிறைவுபடுத்த முடியாது என்பதை உணர முடிந்தாலும் ஓரளவாவது நிறைவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளேன்...

எனக்குத் தேடல்கள் இல்லையெனினும் மற்றவர்களுக்குத் தேவைகள் உள்ளன என்பதை நன்கு உணர்ந்தவள் என்பதால் உளப்போராட்டங்கள் மிகவே செய்கின்றன...

என் ஒருத்தியாள் பலருக்குப் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதே அறமாகும்...

இவற்றிற்கானத் தீர்வுகளைத் தேடியலைய நான் விரும்பவில்லை; தொடரும் போராட்டங்கள் ஒரு தொடர்கதையே என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்...

இறையருள் இருப்பின் தீர்வுகள் தாமே பிறக்கும்...

அதுவரை பொறுமையாகக் காத்திருங்கள் என்று கூறும் அளவுக்குத் தன்னலம் மிகுந்தவளும் அல்லள்; அதற்கான துணிவும் எனக்கில்லை; அஃது அறமுமன்று...

ஆனால், எது எப்படி நடந்தாலும் நடப்பது நடந்துதான் ஆக வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்; மனம் ஆறுதல் கொள்ளுங்கள்.

நான் செய்தவை அனைத்தும் சரியென வாதிட வரவில்லை; அதே வேளையில் தவறென முடிவெடுக்கவும் முடியவில்லை...

அகநிலையில் இப்போராட்டம் இயல்பானதெனினும் ஏற்றுக்கொள்பவர்களின் பக்குவத்தைப் பொருத்தே தெளிவு பெற இயலும்...

எனவே, உங்கள் நிலையிலிருந்து நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் முடிவு என்னைக் கட்டுப்படுத்தாது எனினும் அறம் தன் கடமையைச் செய்வதிலிருந்து தவறாது என்பதைக் கருத்தில் கொண்டு அமைதி பெறுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...