அனைவரையும் அனைத்து நிலையிலும் நிறைவுபடுத்த முடியாது என்பதை உணர முடிந்தாலும் ஓரளவாவது நிறைவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளேன்...
எனக்குத் தேடல்கள் இல்லையெனினும் மற்றவர்களுக்குத் தேவைகள் உள்ளன என்பதை நன்கு உணர்ந்தவள் என்பதால் உளப்போராட்டங்கள் மிகவே செய்கின்றன...
என் ஒருத்தியாள் பலருக்குப் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதே அறமாகும்...
இவற்றிற்கானத் தீர்வுகளைத் தேடியலைய நான் விரும்பவில்லை; தொடரும் போராட்டங்கள் ஒரு தொடர்கதையே என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்...
இறையருள் இருப்பின் தீர்வுகள் தாமே பிறக்கும்...
அதுவரை பொறுமையாகக் காத்திருங்கள் என்று கூறும் அளவுக்குத் தன்னலம் மிகுந்தவளும் அல்லள்; அதற்கான துணிவும் எனக்கில்லை; அஃது அறமுமன்று...
ஆனால், எது எப்படி நடந்தாலும் நடப்பது நடந்துதான் ஆக வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்; மனம் ஆறுதல் கொள்ளுங்கள்.
நான் செய்தவை அனைத்தும் சரியென வாதிட வரவில்லை; அதே வேளையில் தவறென முடிவெடுக்கவும் முடியவில்லை...
அகநிலையில் இப்போராட்டம் இயல்பானதெனினும் ஏற்றுக்கொள்பவர்களின் பக்குவத்தைப் பொருத்தே தெளிவு பெற இயலும்...
எனவே, உங்கள் நிலையிலிருந்து நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் முடிவு என்னைக் கட்டுப்படுத்தாது எனினும் அறம் தன் கடமையைச் செய்வதிலிருந்து தவறாது என்பதைக் கருத்தில் கொண்டு அமைதி பெறுங்கள்...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
வியாழன், 10 நவம்பர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.