வாழ்க்கையின் புறநிலைப் போராட்டங்களைக் கண்டு நான் அஞ்சியதில்லை; அதே வேளையில் அகநிலைப் போராட்டங்களைக் கண்டு மனம் ஓரளவு தளர்ந்தாலும் இறையருளால் அதன் எல்லையைக் காணும் வரை என் தேடல்களும் தொடர்ந்தன; என் போராட்டங்களும் தொடர்ந்தன.
ஒரு நேரத்தில் என் தேடல்கள் நின்றன; தேவைகளும் நின்றன...
ஏதோ ஒன்றுக்காக வாழ்ந்து கொண்டிருந்தேன்; ஆனால் என் மகிழ்ச்சிக்காக மட்டும் அன்று என்பதை உணரும் போது உணர்ந்து கொள்ளுங்கள்...
இந்த முடிவு என்னுடையதன்று; முதலும் முடிவும் இறைவனுடையது என்பதால் தொடக்கிய இறைவனே அதை முடித்தும் வைப்பான் என்ற எண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடர்கின்றேன்...
ஒரு சில முடிவுகள் ஒரு சிலருக்கு அந்நேரத்தில் துன்பத்தைத் தரலாம்; காலப் போக்கில் அனைத்துமே மறைந்துவிடும் என்பதுதான் இயற்கையின் நியதி; இதற்கு யாரும் விதிவிலக்கல்ல...
எனவே, எஃது இயற்கையின் நியதியோ அதுவே நடக்கும் என்பதை உணர்ந்து வாழ்வினைத் தொடருங்கள் என்பதே என்னுடைய தற்போதைய செய்தியாகும்...
என்னால் இப்பொழுது வாழ்வில் ஒரு விதமான நிறைவை உணர முடிகிறது...
நிறைவு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும்...
ஒரு சிலருக்குத் தாம் சேர்த்த செல்வங்கள் நிறைவைத் தரலாம்; சிலருக்கு உயர் பதவி நிறைவைத் தரலாம்; சிலருக்கு அடைந்த புகழ் நிறைவைத் தரலாம்; சிலருக்கு படைத்த படைப்புகள் நிறைவைத் தரலாம்; சிலருக்கு சாதித்த சாதனைகள் நிறைவைத் தரலாம்...
ஆனால் இவையனைத்தும் உண்மையான நிறைவா என்றால் என்னைப் பொருத்தவரையில் இல்லையென்றே கூறுவேன்...
எனக்கு ஏற்பட்ட நிறைவு இதற்கெல்லாம் வேறுபட்டது; பொய்மைக்கும் வாய்மைக்கும் இடையில் நடந்த சத்திய சோதனையில் எனக்குக் கிடைத்த உண்மைகளே எனக்கு நிறைவைத் தந்தன...
இது தொடரும் ஒரு செயலாயினும் தற்பொதைய என் முடிவு இதுவேயாகும்; மாற்றியதும் இனி மாற்றப் போவதும் இறையருள் ஒன்றே...
உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் நடக்கும் ஒவ்வொரு செயலும் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுத் தருவதால், அவையனைத்துமே போற்றுதற்குரியவையே...
எனவே ஒன்று தாழ்ந்ததென்றும் மற்றொன்று உயர்ந்ததென்றும் நம்மால் கூறவியலாது...
மனிதனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை தொடரும் வரை, நிறைவுகளும் மாறிக் கொண்டே இருக்கும்.
அது வரை அவர்களை வினைகளும் தொடரும்; விளைவுகளும் தொடரும்; ஆனால் நிறைவு மட்டும் கிடைக்காது...
நிறைவு கிடைக்க வேண்டுமாயின் நாம் மனிதர்களை விட்டு உள அளவில் விலகியே வாழ வேண்டும் அல்லது பற்றற்ற நிலையில் இருக்க வேண்டும்...
இது நடப்பது அரிது எனினும் இறையருள் கூடுமாயின் நடக்கும் என்பதே உண்மை...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
வியாழன், 10 நவம்பர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.