இன்றைய சூழலில் மிக அமைதியாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்கிறேன்...
ஆழ்ந்த சிந்தனை என்னைப் பொறுமையாக செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறது...
ஆழ்ந்த சிந்தனை என்னைப் பொறுமையாக செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறது...
எழுதுவதற்கு நிறைய விடயங்கள் இருப்பினும் மனம் எதையும் எழுத மறுக்கின்றது...
இங்கு எழுதுவது ஒரு தன்னிலை விளக்கமே!
இதனால் மற்றவர்களுக்குப் பயன் கிட்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் கிடையாது...
உயர்வையும் உண்மையையும் போற்றும் மனிதன் அவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதில் மட்டும் தோல்வியுறுகின்றான்...
வாழ்க்கையின் எல்லா நிலையிலும் மனிதன் மகிழ்ச்சியைத் தேடுவதையும் அடைவதையுமே நோக்கமாகக் கொண்டிருப்பது இயல்பான ஒன்றுதான்...
சிவஞானம் தேடும் ஞானியரும் பேரின்பத்தைத் தேடியே தங்களின் தவத்தை மேற்கொள்கின்றனர்...
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமையுளராகி உலகியல் நடத்தல் வேண்டும் என்ற வள்ளலாரின் ஒருமைப்பாட்டுச் சிந்தனை ஓர் அழகிய கனவுதான் என்ற எண்ணமே வலுப்படுகிறது...
உலகிற்குத் தம்மைத் துறவி என அடையாளம் காட்ட விவேகானந்தருக்குக் கூட காவி உடை தேவைப்பட்டது என்பது எனக்கு வியப்பையே அளிக்கிறது...
மற்றவர்களில் நான் வேறுபட்டவன் என்பதைக் காட்டுவதற்கும் ஓர் அடையாளம் தேவை என்பதுதான் உலக நியதியா?
அனைத்தையும் துறப்பதுதான் துறவு எனின் எதையோ ஒன்றை எதிர்பார்த்துத் தவம் மேற்கொள்வது துறவாகுமா?
எது நமக்குக் கிடைக்க வேண்டுமோ அஃது இறையருளால் திண்ணமாகக் கிடைக்கும் என்பதை உணர முடிகிறது...
எதிர்பார்ப்புக்கள் இருக்கும் வரை ஏக்கங்கள் இருக்கும்; ஏக்கங்கள் இருக்கும் வரை உளப்போரட்டங்கள் தொடரும்; உளப்போராட்டங்கள் தொடரும் வரை உலக வாழ்க்கையில் முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியாது.
எதிர்பார்ப்புக்கள் இருக்கும் வரை ஏக்கங்கள் இருக்கும்; ஏக்கங்கள் இருக்கும் வரை உளப்போரட்டங்கள் தொடரும்; உளப்போராட்டங்கள் தொடரும் வரை உலக வாழ்க்கையில் முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியாது.
எனவே, தொடங்கிய இடத்தில் முடிவதும் முடிந்த இடத்திலிருந்து தொடங்குவதும்தான் வாழ்க்கை என்பதை உணர முற்பட்டால் நமக்கு முதலும் தெரியும்; முடிவும் தெரியும்.
மனித உறவுகள் என்பன தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே நிலையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்புத் தவறானது என்பதை ஒவ்வொருவரும் உணரும் காலம் வரும்...
அதுவரை மனிதர்களின் உளப்போராட்டங்கள் தொடரும் என்பதும் ஓர் எழுதப்படாத விதியே!
மாற்றம் என்ற சொல் மட்டுமே இறுதி வரை மாற்றம் பெறாமல் இருக்கும்; மற்ற அனைத்துமே மாற்றம் காணும் என்பதுதான் இயற்கை விதி...
மாற்றங்கள் ஒரு முடிவை எட்டும் வரை என்னால் எந்தவொரு இறுதி முடிவிற்கும் வரமுடியவில்லை...
எனவே, நான் காத்திருப்பதும் இயற்கையான முடிவிற்கே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.