ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

உளறல் 30 - இங்கு எமது சில உளறல்களைப் பதிவு செய்துள்ளேன்... இவை உங்களுக்கு வழிகாட்ட அல்ல... சிந்தனைக்கு மட்டுமே...

எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிக்கும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...
பொய்களைக் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியின் அளவை விட உண்மையைக் காணும் போது ஏற்படும் துன்பத்தின் அளவு அதிகமாக இருப்பதைத் தெளிவாக உணர முடிகிறது...

மனிதனின் தேடல்கள் தொடங்கும் போது துன்பங்களும் உடன் வரத் தொடங்குகின்றன...
நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதவள் என்றாலும் உறவில் உண்மையை மட்டுமே எதிர்பார்த்து வாழ்ந்தவள்...

ஏதோ ஒரு மேலான உண்மை எனக்குக் காத்திருப்பதைப் போன்றதோர் உணர்வு என்னுள் எழுவதையும் ஓரளவு உணர முடிகிறது...

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...