திங்கள், 26 செப்டம்பர், 2011

உளறல் 33

இப்படித்தான் வாழவேண்டும் என்ற முடிவு நான் செய்ததன்று...
இஃது இயல்பாக நடந்த ஒன்று; நடந்து கொண்டிருக்கின்ற ஒன்று...
முடிவு என் கையில் இல்லை என்பதை மட்டும் உணர முடிகிறது.

ஒன்றை விரும்புவது நானாக இருக்கலாம்; ஆனால் இதைத்தான் விரும்ப வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கவில்லை; என்னால் தீர்மானிக்கவும் முடியவில்லை...

இயற்கையாக நடக்கும் ஒன்றுக்காகவும் நான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலை...

மற்றவர்களுக்காக வாழ்கின்றோம் என்ற எண்ணமும் சிறிது சிறிதாகச் சிதைந்து வருகிறது.

நாம் நமக்காகவே வாழ்கின்றோம் என்பதுதான் உண்மை...
உள்ளத்தில் ஏற்படும் நிறைவைக் கொண்டே எதையும் தீர்மானிக்க முடிகிறது...

உள நிறைவில் வேறுபாடுகள் இருக்கலாம்; அதுவே நம்மை யார் என்று நமக்கு உணர்த்துகிறது...

மற்றவர்களால் இதை ஓரளவே புரிந்து கொள்ள முடியும் என்பதால் அவர்களால் நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.
அதுவரை உளப் போராட்டங்கள் தொடர்வது இயல்பான ஒன்றே...

உள்ளங்கள் வேறாக இருக்கும் வரை உறவுகளில் உண்மையிருக்காது...
உள்ளங்கள் ஒன்றுபடும் போது அங்கு உறவுகளே இருக்காது; உண்மை மட்டுமே இருக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...