இப்படித்தான் வாழவேண்டும் என்ற முடிவு நான் செய்ததன்று...
இஃது இயல்பாக நடந்த ஒன்று; நடந்து கொண்டிருக்கின்ற ஒன்று...
முடிவு என் கையில் இல்லை என்பதை மட்டும் உணர முடிகிறது.
ஒன்றை விரும்புவது நானாக இருக்கலாம்; ஆனால் இதைத்தான் விரும்ப வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கவில்லை; என்னால் தீர்மானிக்கவும் முடியவில்லை...
இயற்கையாக நடக்கும் ஒன்றுக்காகவும் நான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலை...
மற்றவர்களுக்காக வாழ்கின்றோம் என்ற எண்ணமும் சிறிது சிறிதாகச் சிதைந்து வருகிறது.
நாம் நமக்காகவே வாழ்கின்றோம் என்பதுதான் உண்மை...
உள்ளத்தில் ஏற்படும் நிறைவைக் கொண்டே எதையும் தீர்மானிக்க முடிகிறது...
உள நிறைவில் வேறுபாடுகள் இருக்கலாம்; அதுவே நம்மை யார் என்று நமக்கு உணர்த்துகிறது...
மற்றவர்களால் இதை ஓரளவே புரிந்து கொள்ள முடியும் என்பதால் அவர்களால் நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.
அதுவரை உளப் போராட்டங்கள் தொடர்வது இயல்பான ஒன்றே...
உள்ளங்கள் வேறாக இருக்கும் வரை உறவுகளில் உண்மையிருக்காது...
உள்ளங்கள் ஒன்றுபடும் போது அங்கு உறவுகளே இருக்காது; உண்மை மட்டுமே இருக்கும்...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
திங்கள், 26 செப்டம்பர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.