ஒத்த ஓர் பெண்ணும் ஆணும் திருமண பந்தத்தில் விழுவது என்பது இறைவனது ஆணையால் நடப்பது. அந்த களவியல்சூத்திரம் இதோ:
ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே
இதற்குப் பல உரையாசிரியர்கள் பலவாறு உரை சொல்லி இருக்கும் அதே பொழுது,ஒன்றி இருத்தல் பிரிந்து வேறாகி இருத்தல் என்று எப்பொழுதும் ஆகக்கூடிய இருவகை ஆண்பெண் உறவு நிலைகளில், எல்லா வகையிலும் ஒத்த ஓர் பெண்ணும் ஓர் ஆணும் பாலதுவாக, சிவப்பிரகாச செம்பொருளாக அவர்களது உயிரோடு உயிராக நிற்கும்
அதேபொழுது வேறாகி உயர்ந்தும் நிற்கும் அதன் ஆணை வழியே தான் காண்கின்றனர் என்கின்றார். திருமண உறவில் படுப்பது இறைவனேதான், அவனேயாருக்கு யார் பொருத்தமானவர் என்று கண்டு திருமண பந்தத்தில் வீழ்த்துகின்றான் என்கின்றார். அதன் உலகியல் வெளிப்பாடுகளைக் காணும்போது,எல்லா வகையிலும் அந்த ஆண்மகன் உயர்ந்து இருப்பின் அத்திருமணம்கடியத்தக்கதல்ல என்கின்றார். இக்கருத்தில் ஆணாதிக்கக் கருத்து இருப்பதாகத் தோன்றும். அன்பர்கள் இதனைப் பற்றி இன்னும் சிந்திக்கலாம். ஆனால்முக்கியமான கருத்து திருமணம் என்பது இறைவனது ஆணையின் பேரில் நடப்பது.
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.