ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

தொல்காப்பியரின் களவியல் ஆய்வு...

ஒத்த ஓர் பெண்ணும் ஆணும் திருமண பந்தத்தில் விழுவது என்பது இறைவனது ஆணையால் நடப்பது. அந்த களவியல்சூத்திரம் இதோ:

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே


இதற்குப் பல உரையாசிரியர்கள் பலவாறு உரை சொல்லி இருக்கும் அதே பொழுது,ஒன்றி இருத்தல் பிரிந்து வேறாகி இருத்தல் என்று எப்பொழுதும் ஆகக்கூடிய இருவகை ஆண்பெண் உறவு நிலைகளில், எல்லா வகையிலும் ஒத்த ஓர் பெண்ணும் ஓர் ஆணும் பாலதுவாக, சிவப்பிரகாச செம்பொருளாக அவர்களது உயிரோடு உயிராக நிற்கும்
அதேபொழுது வேறாகி உயர்ந்தும் நிற்கும் அதன் ஆணை வழியே தான் காண்கின்றனர் என்கின்றார். திருமண உறவில் படுப்பது இறைவனேதான், அவனேயாருக்கு யார் பொருத்தமானவர் என்று கண்டு திருமண பந்தத்தில் வீழ்த்துகின்றான் என்கின்றார். அதன் உலகியல் வெளிப்பாடுகளைக் காணும்போது,எல்லா வகையிலும் அந்த ஆண்மகன் உயர்ந்து இருப்பின் அத்திருமணம்கடியத்தக்கதல்ல என்கின்றார். இக்கருத்தில் ஆணாதிக்கக் கருத்து இருப்பதாகத் தோன்றும். அன்பர்கள் இதனைப் பற்றி இன்னும் சிந்திக்கலாம். ஆனால்முக்கியமான கருத்து திருமணம் என்பது இறைவனது ஆணையின் பேரில் நடப்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...