எதிர்பார்ப்புகள் உள்ளவரை ஏக்கங்கள் இருக்கும்...
ஏக்கங்கள் உள்ளவரை மன சஞ்சலங்கள் இருக்கும்...
மன சஞ்சலங்கள் இருக்கும்வரை உளப்போராட்டங்கள் தொடரும்...
இவ்வகையில் தோன்றும் தொடங்கும் உளப்போராட்டங்களே நம்மைச் சிந்திக்க வைக்கின்றன...
ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கும் மனிதனால் மட்டுமே தன் இயலாமையையும் இறைவனின் மகத்தான ஆற்றலையும் உணர முடிகிறது என்பதை என்னால் ஓரளவு உணர முடிகிறது...
இன்று தனிமையை அதிகம் விரும்பும் நிலை ஏற்பட்டது.
ஓய்வின்றிப் பணியாற்றுவதும் சில விடயங்களை மறக்கவே என்பதும் எனக்குப் புரிகிறது...
அனைத்திலிருந்தும் விடுதலை பெற மனம் விரும்பினாலும் ஏதோவொன்று தடுக்கிறது...
என் தேடல்கள் நின்றுவிட்டன என்பதும் உண்மைதான்...
ஆயினும் இறையருளால் காட்டப்படும் சில உண்மைகள் என் முந்தைய தேடல்களுக்கான விடைகளைத் தாமாகவே தருகின்றன...
தற்சமயம் நான் நானாக வாழவில்லை என்பது மட்டுமே ஓரளவு புரிகிறது...
ஆயினும் ஏதோவொன்று என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது...
வாழ்க்கை நிறைவு பெற்றுவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு என்னுள் ஏற்படுகிறது...
எது நடந்தாலும்...என் பணிகள் முழுமை பெறவில்லை எனினும்...
அவை தொடரும் என்பதில் யாரும் ஐயம் கொள்ள வேண்டா...
என்னுடன் இருந்தவர்கள் ஒரு சிலராவது என் பணியினைத் தொடர்வார்கள்...
இஃது என் எதிர்பார்ப்பன்று; எதார்த்தம்...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.