வியாழன், 22 செப்டம்பர், 2011

உளறல் 31

அவ்வப்போது எனக்கு ஏற்படும் சிறிது நேர மகிழ்ச்சி கூட பறிக்கப்படுவதைப் போன்றதோர் உணர்வு எழுகிறது...
நெருக்கமானவர்களிடம் கூட துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை...
உண்மையைப் பேசினால் மற்றவர்களுக்குத் துன்பம் நேருமே என்ற கவலை ஒரு புறம்...
உண்மையானவர்களிடம் ஒன்றை மறைக்க நேரிடுகிறதே என்ற வருத்தம் ஒரு புறம்...
அறம் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும் என்பதே உண்மையாக இருக்கும் என்று கருதுகிறேன்...
முடிவு எதுவாக இருப்பினும் அதைத் தங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை உண்மை உள்ளங்களுக்கு இறைவன் அளிக்க வேண்டும்...

என் நிலையை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தற்போது எழுவதில்லை...
அவர்கள் அவர்களைப் புரிந்து கொள்ளுதலே நலம்.

வாழ்க்கை தொடர்வதும் முடிவதும் நம் கையில் இல்லை; இறைவனின் விருப்பம் எதுவோ, அதுவே நடக்கும் என்பதால் எனது பணியினைத் தொடர்கின்றேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...