அவ்வப்போது எனக்கு ஏற்படும் சிறிது நேர மகிழ்ச்சி கூட பறிக்கப்படுவதைப் போன்றதோர் உணர்வு எழுகிறது...
நெருக்கமானவர்களிடம் கூட துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை...
உண்மையைப் பேசினால் மற்றவர்களுக்குத் துன்பம் நேருமே என்ற கவலை ஒரு புறம்...
உண்மையானவர்களிடம் ஒன்றை மறைக்க நேரிடுகிறதே என்ற வருத்தம் ஒரு புறம்...
அறம் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும் என்பதே உண்மையாக இருக்கும் என்று கருதுகிறேன்...
முடிவு எதுவாக இருப்பினும் அதைத் தங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை உண்மை உள்ளங்களுக்கு இறைவன் அளிக்க வேண்டும்...
என் நிலையை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தற்போது எழுவதில்லை...
அவர்கள் அவர்களைப் புரிந்து கொள்ளுதலே நலம்.
வாழ்க்கை தொடர்வதும் முடிவதும் நம் கையில் இல்லை; இறைவனின் விருப்பம் எதுவோ, அதுவே நடக்கும் என்பதால் எனது பணியினைத் தொடர்கின்றேன்!
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
வியாழன், 22 செப்டம்பர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.