இன்று உடல் நலமும் மன நலமும் ஒரு சேர பாதிக்கப்பட்டிருந்ததால் மிகவும் சோர்ந்து விட்டேன்.
ஆனாலும் மற்றவர்களின் நலன் கருதி என் பணியைத் தொடர்ந்து செய்ய போராடிக்கொண்டிருக்கிறேன்...
என் மீது உண்மையான அன்பு காட்ட, பணிவிடை செய்ய ஒரு சிலர் இருந்தாலும் இறைவனின் விருப்பம் வேறாக இருப்பதை உணர முடிகிறது...
தனி மனிதனாக தனிமையில் நோயுடன் வாடும் போதுதான் இவர்களின் ஆற்றலும் தெரிகிறது; நம் ஆற்றலும் தெரிகிறது.
உள்ளம் உண்மையைத் தேடுகின்றது...
உலகம் பொய்மையை நமக்குக் காட்டும் போதுதான் நம்மால் உண்மையையே உணர முடிகிறது...
இன்றைய உலகில் நல்லவர்களைக் காண்பதே அரிதாகி விட்டது...
நம்மிடையே நல்லவர்களை விட நடிப்பவர்களே அதிகம்....
இஃதும் ஓர் எதிர்பார்ப்புதான்..
எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்க்கைதான் உண்மை வாழ்க்கை என்பதை உணர முடிந்தாலும் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு உள்ளத்தில் எழவே செய்கிறது...
உலக மாந்தர்கள் வேற்றுமைகளால் பிணைக்கப்பட்டவர்கள்...
இவர்களிடம் ஒருமை நிலை ஏற்படுவது என்பது அருமையே!
ஒருமை நிலை ஏற்படின் அங்கே இறைமை விளங்கும் என்பதுதான் உண்மை நிலை...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
சனி, 13 ஆகஸ்ட், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.