வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

"சீதனம் என்றொரு சிறைஎதற்கு?"

சீதனம் என்றொரு சிறையினிலே
சிறைப்படும் சீதைகள் ஆயிரமே!
சாற்றிடும் வேதங்கள் பொய்த்திடுமோ?
தர்மத்தை மறந்துநீர் வாழ்ந்திடவோ?

சாதனை செய்பவர் நாங்களன்றோ!
சான்றுகள் பலவுள பூமியிலே!
வேதனை மிகுந்திடும் வாழ்வெதற்கு?
விலங்கினை ஒடித்திட வேண்டாமோ?

சாதிகள் பேசியே தரம்பிரித்தீர்!
தரணியில் நாங்கள் தலைகுனிந்தோம்!
நீதிகள் பேசியே நாமிருந்தோம்!
நித்தமும் எங்களை கலங்கவிட்டீர்!

சீரிய குணங்களை நாம்பெற்றோம்!
சீதனம் என்றொரு சிறைஎதற்கு?
செந்தமிழ் மரபு பிழைத்திடவோ?
சிறப்புடன் வாழ்வோம் தமிழினமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...