சீதனம் என்றொரு சிறையினிலே
சிறைப்படும் சீதைகள் ஆயிரமே!
சாற்றிடும் வேதங்கள் பொய்த்திடுமோ?
தர்மத்தை மறந்துநீர் வாழ்ந்திடவோ?
சாதனை செய்பவர் நாங்களன்றோ!
சான்றுகள் பலவுள பூமியிலே!
வேதனை மிகுந்திடும் வாழ்வெதற்கு?
விலங்கினை ஒடித்திட வேண்டாமோ?
சாதிகள் பேசியே தரம்பிரித்தீர்!
தரணியில் நாங்கள் தலைகுனிந்தோம்!
நீதிகள் பேசியே நாமிருந்தோம்!
நித்தமும் எங்களை கலங்கவிட்டீர்!
சீரிய குணங்களை நாம்பெற்றோம்!
சீதனம் என்றொரு சிறைஎதற்கு?
செந்தமிழ் மரபு பிழைத்திடவோ?
சிறப்புடன் வாழ்வோம் தமிழினமே!
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.