மனிதர்களைப் பற்றி என்னுள் எழுந்த சிந்தனைக்கு இன்று ஓரளவு விளக்கம் கிடைத்தது...
ஆண்டவன் நமக்குத் தேவையான நேரத்தில் காட்டும் சில கட்சிகளே நமக்கு உண்மைகளைத் தெளிவாக உணர்த்தும் ஆற்றல் படைத்தவை...
நான் வாழ்க்கையை நூல்களில் தேடிய காலங்களில் பெற்ற தெளிவை விட மனிதர்களிடம் பழகிய காலங்களில் பெற்ற தெளிவே என்னை எனக்கே உணர்த்தியது...
தத்துவங்கள் என்பன நம்மை நமக்கு யாரென்று உணர்த்தும் கருவிகளே...
வாழ்வில் தத்துவங்களைக் கடைப்பிடிப்பதென்பது மனிதரால் இயலாத ஒன்று...
ஆனால் வாழ்க்கையே தத்துவமாக விளங்குவது இயல்பாக நடக்கும் ஒன்று...
இறையருளால் மனித வாழ்க்கையின் பட்டறிவுகளே தத்துவங்களாக உருப்பெறுகின்றன...
எனவே,
பேசுவதற்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட தத்துவங்கள் நமக்கு இனிமையாகவே இருக்கும்...
ஆனால் தத்துவங்களாக வாழ்கின்றவர்கள் அனைவருக்குமே இனியவர்களாக இருப்பர்...
மனிதர்கள் தத்துவங்களைப் பேசுவதைவிட தத்துவங்களாக வாழ முயல வேண்டும் என்பதே நமது அவா...
ஆனால் இஃது இயல்பாக நடவாத ஒன்று...
இறையருள் இருந்தால் மட்டுமே இது கைகூடும்...
தேடல்கள் முடிந்து விட்டாலும் இறையருளால் கிடைக்க வேண்டுவன தாமாக நம்மை வந்தடைகின்றன...
எளிய வாழ்வு, அளவான பேச்சு, எந்நிலையிலும் எதிர்கால நம்பிக்கை, பதவிகளைத் தொண்டாக மதித்தல், தன்னைப் பற்றிய திருத்தமான சிந்தனைகள், வாழ்க்கைத் திட்டங்கள், பெரியவர்களின் வரலாறுகளைப் படித்தல், சோர்வுக்கு இடங் கொடாத ஊக்கங்கள், பகட்டின்றித் தூய எண்ணத்தால் இறைவனை வழிபடுதல்... இவையெல்லாம் நான் கண்ட முன்னேற்ற நெறிகள்.
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிந்தனைக்கு ...
“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...
-
Upatesam 21 பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன் பெற்றார் அம்மன்றிற் பிரியாப் பெரும்பேறு பெற்றார் உலகு...
-
உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்... உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முட...
-
Upatesam 11 123 அளித்தான் உலகெங்குந் தானான உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள் அளித்தான் பேரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.