திங்கள், 15 ஆகஸ்ட், 2011

தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனி நறு மலயத் தண் காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வெண்ணிலாக் கதிர் மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத் திகழ் மரன் பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம் பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

முப்பது கோடி வாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடி தோளுயர்ந்துனக்காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திறலுடையாய்! அருளினை போற்றி!
பொருந்தலர் படை புறத்தொழித்திடும் பொற்பினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

நீயே வித்தை! நீயே தருமம்!
நீயே இதயம், நீயே மருமம்!
உடலகத்திருக்கும் உயிருமன் நீயே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

தடந்தோளகலாச் சக்தி நீ அம்மே!
சித்தம்தீங்காதுரு பக்தியும் நீயே!
ஆலயந்தோறும் அணி பெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவி இங்குனதே!
வந்தே மாதரம் வந்தே மாதரம்!

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல்லிதழ்களில் களித்திடும் கமலை நீ!
வித்தை நன்கருளும் வெண்மலர்த் தேவி நீ!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

போற்றி வான்செல்வி! புரையிலை, நிகரிலை!
இனிய நீர்ப்பெருக்கினை இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!
இனிய புன்முறுவலாய்! இலங்கு நல்லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!



1 கருத்து:

  1. vanakam yamuna nalama ean kadetham kedaihaveilaya ean een naifi vaindam eainu soilukeray. eaiku pureyavili .ynkul manam puibadum vahieal nan eathavathu soile eruthial sorry neekul unkul masauiku unimi yaha iruthial eainteam pasalame. eaini puikaviliyaintarl open naha soiluigul. comment paina vaidam eainru soiluikul .but neekul eani saintheal thal than unimi unikulu thereum .enimail unikal manasi nan kaistapatutha nan vruipavaili .unkul vaiki neekal than mutevu eaituka vaindum.(9865297059) nan poai soillavaili unkuleam iruithu unimiyana naipi maitum than keaikeran. unkal kavali eainetam soilukul (unkuiku vreupam iruthal )eaini poruithavari unimiyana naipan thanathu naipanen manathi phureithukoilavaindum .place one chains yamuna . thirst me ok . naire vanakam. வந்தே மாதரம்

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...